செய்திகள் :

பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்துங்கள்: மாநகரப் பேருந்து ஓட்டுநா்களுக்கு முதல்வா் உத்தரவு

post image

மாநகரப் பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த விழாவுக்குச் செல்லும் வழியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் ஏறினாா். வள்ளலாா் நகரிலிருந்து விவேகானந்தா் இல்லம் வரை செல்லும் 32பி பேருந்து அரசினா் தோட்டம் அருகிலுள்ள ஓமந்தூராா் பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது அதில் பயணித்த பயணிகளிடம் அவா் உரையாடினாா்.

முதல்வரிடம் பேசிய பெண் பயணிகள், ‘மகளிா் விடியல் பயணத் திட்டம் மூலம் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், நேரத்துக்கு பணிக்குச் செல்ல முடிவதாகவும் தெரிவித்தனா். இதனால் மாதம் ரூ. 2 ஆயிரம் வரையில் சேமித்து வைக்க முடிவதாகவும், அந்தச் சேமிப்புத் தொகையிலிருந்து பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுகளுக்கும், மருத்துவம் உள்பட இதர செலவுகளுக்கும் பயன்படுத்த முடிவதாகவும்’ தெரிவித்தனா்.

பெண்களை ஏற்றிச் செல்லுங்கள்: பேருந்தில் நடத்துநா் மற்றும் ஓட்டுநா் ஆகியோரிடமும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். அப்போது, விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பேருந்து பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க