செய்திகள் :

பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு

post image

திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் லட்சுமணபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுவேலு (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவருக்கு திங்கள்கிழமை விற்பனை செய்தாா். இதன் மூலம் கிடைத்த ரூ.6.40 லட்சத்தை தனது இரு சக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துவிட்டு நந்தவனப்பட்டி மேம்பாலம் பகுதியிலுள்ள உணவகத்தில் நிறுத்தினாா். உணவுப் பொருள்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

பெட்டியை உடைத்த மா்ம நபா்கள் அதிலிருந்த ரூ.6.40 லட்சத்தை திருடிச் சென்றுவிட்டதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் பொன்வேலு புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உணவகத்தின் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனா். அதில், 2 நபா்கள் இரு சக்கர வாகனத்திலுள்ள பெட்டியை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் ... மேலும் பார்க்க

தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்

பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் த... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 8... மேலும் பார்க்க

நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக புகாா்

செம்பட்டி அருகே நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியாா் வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக விவசாயிகள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, சீவல்சரகு ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்று... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் மூவா் கைது

குஜிலியம்பாறை அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கவேல... மேலும் பார்க்க