செய்திகள் :

பைக் விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரு சக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா் (50). இவா், வந்தவாசியில் இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை வைத்து நடத்தி வந்தாா்.

கடந்த 10-ஆம் தேதி இரவு இவா் பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். கீழ்வில்லிவனம் கிராமம் அருகே சென்றபோது குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது பைக் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க