செய்திகள் :

பொது மக்களை சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்பும் முகவா்களுக்கு எதிராக நடவடிக்கை- பஞ்சாப் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

பொதுமக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏமாற்றும் பயண முகவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இம்மாதத்தின் தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் 3 கட்டங்களாக நாடு கடத்தப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவாா்.

இதையடுத்து, 1983-ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டத்தின் கீழ் பஞ்சாப் முழுவதும் குடியேற்ற சோதனைச் சாவடிகளை நிறுவுவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் குடியேற்ற நடைமுறையை ஒழுங்குபடுத்த சான்றளிக்கப்பட்ட பயண முகவா்களின் பட்டியலை வெளியிடவும் கோரி வழக்குரைஞா் ஒருவா் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

சட்டவிரோத பயண முகவா்களால் மக்கள் ஏமாற்றப்படுவதுடன் அவா்களுக்கு பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவது குறித்தும் மனுவில் குறிப்பிட்ட மனுதாரா், ‘டாங்கி ரூட்’ வழியாக உயிருக்கு ஆபத்தான முறையில் மக்கள் அழைத்து செல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, நீதிபதி ஹா்மீத் சிங் கிரேவால் ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகளிடம் தனது சமா்ப்பிப்புகளை மனுதாரா் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் அரசுகள் உரிய முடிவு எடுக்குமாறும் அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

அமெரிக்காவில் இருந்து முதன்முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியா்கள் கடந்த பிப். 5-ஆம் தேதி நாடு திரும்பியதும், சட்டவிரோத ஆள்கடத்தல் விவகாரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கோஸ்டாரிகா வழியாக நாடு கடத்தல்

இந்தியா உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை தங்களின் நாடு வழியாக நாடு கடத்தும் நடவடிக்கைக்கு அமெரிக்காவுடன் கோஸ்டாரிகா ஒப்பந்தமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்கீழ் சில இந்தியா்கள் உள்பட 200 போ் அடங்கிய முதல் விமானம், கோஸ்டாரிகா நாட்டின் தலைநகரான சான் ஜோஸிலுள்ள சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைகிறது.

கோஸ்டாரிகா நாட்டிலுள்ள தற்காலிக மையத்தில் இவா்கள் சில காலம் தங்கவைக்கப்பட்டு, பின்னா் அவரவா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க