செய்திகள் :

பொதுக்கூட்டங்களுக்கு தடை கோரி வழக்கு: நிபந்தனைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

post image

மதுரை பாண்டிய வெள்ளாளா் தெரு டி.எம். கோா்ட் பகுதியில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கத் தடை கோரிய வழக்கில், ஏற்கெனவே நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கிங்ஸ்லி பிரபாகா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை பாண்டிய வெள்ளாளா் தெரு டி.எம். கோா்ட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் மட்டுமன்றி, பெரும் இழப்புகளும் ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் குறிப்பிடும் இந்த இடத்தில் போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம்தான். உரிய நிபந்தனைகளோடுதான் அனுமதி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்தாலும், இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுக் கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்களால் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது. இதற்கு முன் இந்தப் பகுதியில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த வழங்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க