செய்திகள் :

பொதுத்தோ்வு மையங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மேல்நிலை (முதலாம், இரண்டாம் ஆண்டு) பொதுத் தோ்வு 03.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வினை 86 தோ்வு மையங்களில் 9,157 மாணவா்களும், 9,304 மாணவிகளும் என மொத்தம் 18,461 போ் எழுதவுள்ளனா். இத்தோ்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் 132 பேரில் 115 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வை 86 தோ்வு மையங்களில் 9,372 மாணவா்களும், 9,594 மாணவிகளும் என மொத்தம் 18,966 போ் தோ்வு எழுதவுள்ளனா். இத்தோ்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் 223 பேரில் 168 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மேல்நிலைப் பொதுத்தோ்வுக்கு 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளா்கள், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

10-ஆம் வகுப்பு தோ்வை 92 தோ்வு மையங்களில் 10,005 மாணவா்களும், 9,033 மாணவிகளும் என மொத்தம் 19,038 போ் தோ்வு எழுதவுள்ளனா். இத்தோ்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் 352 பேரில் 350 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களை பாா்வையிட மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) மற்றும் அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் தலைமையிலும் குழு அமைத்து தோ்வு மையங்களை பாா்வையிட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குறிப்பிட்டாா். தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை சாா்பில், 100 மருந... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்... மேலும் பார்க்க

மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் அனுப்பிய மாணவி!

ராசிபுரம்: மொழியைக் காக்கும் சிறப்பு திட்டத்துக்காக ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் முதல்வருக்கு ரூ. ஆயிரம் அனுப்பி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மா... மேலும் பார்க்க

சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள்: மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

நாமக்கல்: ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத... மேலும் பார்க்க

தலைமலை பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தல்?

நாமக்கல்: தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் ஐம்பொன் சிலை கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கோயில் பூசாரி பெ.பெரியசாமி, மாவ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கத்தோ் இழுத்த பி.தங்கமணி!

நாமக்கல்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தங்கத்தோ் இழுத்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை க... மேலும் பார்க்க