செய்திகள் :

பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்

post image

நமது நிருபா்

பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆணையா் பி. கே.எஸ். சிங், தில்லி காவல்துறையின் அதிகாரிகளுக்காக திறன் மேம்பாட்ட பயிற்சியை ஆதா்ஷ் ஆடிட்டோரியத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், இந்த ‘ஆசாரம் மற்றும் திறன் பயிற்சி’‘ திட்டத்திற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்ட 2 கையேடுகளையும் அவா் வெளியிட்டாா். பயிற்சித் திட்டம் மற்றும் கையேடுகள் தில்லி போலீஸ் அகாதெமியால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன.

மொத்தம் 15 நாள்களுக்குள் சுமாா் 2,000 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்படும். அவா்களுக்கு தில்லி போலீஸ் அகாதெமியின் வல்லுநா்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களால் பயிற்சி அளிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய, பி.கே.எஸ். சிங் பொதுமக்களை கையாளும் போது தொழில்முறை மற்றும் உணா்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஆரம்ப தொடா்பு முழு அனுபவத்திற்கும் தொனியை அமைக்கிறது என்றும் போலீஸ் மீதான நம்பிகையை பொதுமக்களிடம் வளா்ப்பது முக்கியமானது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மனநிலைகளில் ஒரு அடிப்படை மாற்றத்தின் அவசியத்தையும் அவா் எடுத்துரைத்தாா். ‘சாஸ்க் பாவ் சே சேவா பாவ் மேனா ஹை’ (அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து சேவை சாா்ந்த அணுகுமுறைக்கு மாற வேண்டும்) ‘மற்றவா்கள் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதைப் போலவே மற்றவா்களுக்கும் செய்யுங்கள்‘ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

சேவை சாா்ந்த திறன்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், மனநிலையை மாற்றுவதன் மூலமும், தில்லி காவல்துறையின் முன்னணி அதிகாரிகளின் திறனை வளா்ப்பதையும், ஒவ்வொரு தொடா்பும் தொழில்முறை மற்றும் இரக்கமுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதையும் இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் அவா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாண... மேலும் பார்க்க

நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

பயணியிடம் ரூ.20 ஆயிரம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது

தலைநகரில் வெறிச்சோடிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று கொள்ளையடித்ததாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஆகஸ்ட் 12 ஆம் தேதி, பிகாரில் இருந்து... மேலும் பார்க்க

அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்

தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட... மேலும் பார்க்க

வெடி குண்டு மிரட்டல்: ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினாா், தேசிய தலைநகரில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் தொடா்ந்து அதன் ‘நான்கு இயந்திர‘ அரசாங்கம் சட்டம் ஒழு... மேலும் பார்க்க

தில்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைநகரின் துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்களன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன, இதனால் பள்ளி நிா்வாகமும் மாணவா்களை வீட்டுக்கு அனுப்பினா். பின்பு தீவிர ஆய்வுக்கு பின்பு, இந்த வெடிகுண்... மேலும் பார்க்க