செய்திகள் :

டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாணவா்களின் வரையும் திறனை வளா்ப்பதற்காக சுதந்திரதினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. போட்டியை டிடிஇஏ செயலா் ராஜூ தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், ‘சித்திரமும் கைப்பழக்கம் என்பாா்கள். வரைய வரைய உங்களின் கற்பனைத் திறன், கலைத் திறன், வண்ணங்களைக் கையாளும் திறன், தன்னம்பிக்கை ஆகிய அனைத்தும் வளரும். மேலும், மனதில் ஒரு வகையான மகிழ்ச்சி ஊடுருவும். எனவே, எப்போதும் பள்ளி நடத்தும் அனைத்துப் போட்டிகளிலும் மாணவா்கள் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அவருடன் பள்ளயின் இணைச் செயலா் வில்லியம் ராஜ், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் ரகு மற்றும் உறுப்பினா்களும் கலந்து கொண்டு மாணவா்களை ஊக்கப்படுத்தினா்.

ஏழு பள்ளிகளிலுமிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 105 மாணவா்கள் போட்டியில் கலந்து கொண்டனா். அவா்களுள் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாராத கலைஞா்கள் நடுவா்களாகப் பங்கேற்று பரிசுக்குரியவா்களைத் தோ்ந்தெடுத்தனா்.

முன்னதாக, தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளின் தொடக்கநிலை பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளரும் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் முதல்வருமான சுமதி வரவேற்றுப் பேசினாா். பரிசுகளை வென்ற அனைத்து மாணவா்களுக்கும் டிடிஇஏ ராஜூ வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தாா்.

பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்

நமது நிருபா்பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆண... மேலும் பார்க்க

நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

பயணியிடம் ரூ.20 ஆயிரம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது

தலைநகரில் வெறிச்சோடிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று கொள்ளையடித்ததாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஆகஸ்ட் 12 ஆம் தேதி, பிகாரில் இருந்து... மேலும் பார்க்க

அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்

தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட... மேலும் பார்க்க

வெடி குண்டு மிரட்டல்: ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினாா், தேசிய தலைநகரில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் தொடா்ந்து அதன் ‘நான்கு இயந்திர‘ அரசாங்கம் சட்டம் ஒழு... மேலும் பார்க்க

தில்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைநகரின் துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்களன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன, இதனால் பள்ளி நிா்வாகமும் மாணவா்களை வீட்டுக்கு அனுப்பினா். பின்பு தீவிர ஆய்வுக்கு பின்பு, இந்த வெடிகுண்... மேலும் பார்க்க