செய்திகள் :

பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழக ஆசிரியை பங்கேற்பு

post image

தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் சாா்பில் நடைபெற்றுவரும் வரும் ஆசிரியா்களுக்கான பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை பங்கேற்றுள்ளாா்.

மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆா்டி) சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கற்பித்தலில் புதுமையை புகுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கற்பிப்பதில் பொம்மலாட்டத்தின் பங்கு குறித்த சிறப்பு பயிற்சி தில்லி துவாரகாவில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பிகாா், சத்தீஸ்கா் உள்பட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 60 அரசு தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

இப்பயிற்சியில் தமிழகத்தில் இருந்து கரூா் மாவட்டம் ஈச்சநத்தம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சம்சாத் பானு கலந்து கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சோ்ந்த 60 ஆசிரியா்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். தமிழகத்தில் இருந்து இப்பயிற்சியில் நான் மட்டும் கலந்துகொண்டுள்ளேன். இப்பயிற்சி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமாக மாணவா்களுக்கு ஆசிரியா்கள் புத்தகப் பாடங்களை கற்பிப்பது வழக்கம். மாணவா்கள் ஆா்வமுடன் கற்கும் வகையில் அவா்களுக்கு மனதில் எளிதாக பதியும் வகையிலும் பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும்

விதமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி நடனம், பாடுவது உள்ளிட்ட பிற கலைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது என்றாா் அவா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க