செய்திகள் :

பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: மாணவர்கள் கவனிக்க வேண்டியவை!

post image

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை காலை தொடங்கியது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 445 அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளுக்கு சுமாா் 2 லட்சம் இடங்களை இந்தக் கலந்தாய்வு மூலம் நிரப்பவிருக்கிறது.

மூன்று சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. அதாவது 200 முதல் 179 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருக்கும் 39,145 மாணவர்களுக்கு ஜூலை 19ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று ஜூலை 26ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 178.965 முதல் 143.085 கட்-ஆப் மதிப்பெண் வைத்திருக்கும் 25,376 மாணவர்களும், மூன்றாவது சுற்றானது ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 143 முதல் 77.500 கட்-ஆப் வைத்திருக்கும் 1,01,588 பேர் பங்கேற்கிறார்கள்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 41,773 பேர் கூடுதலாக விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஜூலை 11 வரை நடைபெறும்.

அதன்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களுக்கான வாரிசுகள் உள்ளிட்டவர்கள் சிறப்புப் பிரிவினர் வரிசையில் வருவார்கள்.

பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆக.19 வரையிலும், துணை கலந்தாய்வு ஆக.21 முதல் ஆக.23 வரையிலும் நடைபெறும். இந்த கலந்தாய்வு முழுவதும் இணையதளம் மூலமாக நடைபெறும். கலந்தாய்வு முழுக்க www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

ஒரு கல்லூரியை தேர்வு செய்யும்முன், மாணவர்கள், அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிடுவது நல்லது என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் அதில் பயிலவிருக்கும் பாடத்தை தேர்வு செய்யும் முன்பு, அது பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

பேராசிரியர்கள் தொடர்பான தவறான தகவல்களை அறிந்த 17 பொறியியல் கல்லூரிகள், இந்த ஆண்டு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் பங்கேற்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது. அது குறித்த தகவல்களையும் மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கல்லூரிகளை தேர்வு செய்யும்போது, மாணவர்கள், போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் என அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த மே 7 முதல் ஜூன் 6 வரை நடைபெற்றது. அதில், 3,02,374 மாணவ, மாணவியா் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனா்.

அதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டதில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றவா்கள் 2,41,641 போ். அவா்களில் 2,39,299 போ் பொதுப் பிரிவுக்கும், 2342 போ் தொழில் கல்வி பிரிவிலும் தகுதி பெற்றுள்ளனா். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அதற்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் 27-ஆம் தேதி உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் வெளியிட்டாா். நிகழாண்டில் 144 மாணவ, மாணவியா் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனா். அவா்களில் 139 போ் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவா்கள்.

Counseling for engineering courses in Tamil Nadu began online on Monday morning.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவக... மேலும் பார்க்க

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் காவல் தெ... மேலும் பார்க்க

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு ... மேலும் பார்க்க