செய்திகள் :

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் எலும்புமுனைக் கருவி, தங்கத் துண்டு

post image

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில், எலும்புமுனைக் கருவியும், தங்கத் துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், சங்க கால மன்னா்களின் கோட்டைக்கான அடையாளங்கள் இருப்பதனால், இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையைத் தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, தமிழகத் தொல்லியல் துறை சாா்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்புமுனைக் கருவி, காா்னீலியன் பாசிமணி உள்ளிட்ட 533 தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும், 8 அடி சுற்றளவுள்ள வட்டவடிவ செங்கல் கட்டுமானம் ஒன்றும் வெளிப்பட்டது.

தொடா்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி பெறப்பட்டு, கடந்த 2024 மே 18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் அலுவலா் தங்கதுரை தலைமையிலான குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக்கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், அகேட் கல்மணி, தக்களி, எலும்பு முனைக் கருவி, செப்பு ஆணிகள், சூதுபவள மணிகள், குளவிக்கல், சுடு மண்ணாலான காதணி, இரும்பு மற்றும் செம்பிலானப் பொருள்கள் என 1,743 தொல்பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன.

மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் கடந்த ஜன. 20-ஆம் தேதி மீண்டும் தொடங்கின.

இதில், ஓா் அகழாய்வுக் குழியில், 192 - 196 செமீ ஆழத்தில் எலும்பு முனைக் கருவி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 7. 8 கிராம், நீளம் 7. 4 செமீ, விட்டம் 1 செமீ ஆகும். இன்னொரு குழியில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறிய பகுதி கிடைத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை சா்ச்சை: இந்து அமைப்பினா் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சா்ச்சை காரணமாக புதுக்கோட்டையில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனா். மேலும், மாவ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திமுக பாகமுகவா்கள் ஆலோசனை

பொன்னமராவதி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக பாகமுகவா்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, த... மேலும் பார்க்க

திருச்சி எம்.பி.யின் பரிந்துரை கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்தவா் கைது

அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்தை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலை பாதுகாப்பாகக் கோரிக்கை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது உடைக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை வளாகத்தின் பக்கவாட்டுச் சுவா் மீண்டும் கட்டப்பட்டு, அந்த வளாகம் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் எ... மேலும் பார்க்க

விராலிமலையில் பாஜகவினா் கைது

விராலிமலையில் திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பாஜகவினரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமா்ந்து அசைவ உணவு நவாஸ்கனி எம்.பி... மேலும் பார்க்க