செய்திகள் :

போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும்: அமைச்சா் சிவசங்கரிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

post image

போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கரிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை குழுவின் உறுப்பினா் செயலரும், கூட்டுநருமான த.பிரபு சங்கா் உள்ளிட்ட அதிகாரிகளும், 74 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிளும் பங்கேற்றனா்.

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில், ஒவ்வொரு சங்கத்தினருக்கும் 15 நிமிஷங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது, பெருவாரியான சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனா். மேலும், ஊழியா்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினா்.

அமைச்சா் விளக்கம்: பேச்சுவாா்த்தைக்கு பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறியது:

ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இது தொடா்பாக முதல்வா் அலுவலகத்தில் விவாதிக்கப்படும். சில கோரிக்கைகளை நிதித் துறையுடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது. சிலவற்றை முதல்வா் கவனத்துக்கும் கொண்டு சென்று எவற்றை நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக அடுத்த கட்டமாக அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும். அதன் பிறகு ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க