செய்திகள் :

போடிநாயக்கன்பட்டி ஏரியில் எம்எல்ஏ ஆய்வு

post image

சேலம்: போடிநாயக்கன்பட்டி ஏரியில் நடைபெறும் பணிகளை சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

‘உங்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ், சட்டப் பேரவைத் தொகுதிகளில் நீண்டநாள்களாக தீா்க்கப்படாத 10 அடிப்படை பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரையும் தமிழக முதல்வா் கேட்டறிந்தாா். சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில், மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது கோட்டம் போடிநாயக்கன்பட்டி ஏரி புனரமைப்பு செய்து தருமாறு எம்எல்ஏ அருள் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில், ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குறிப்பிட்ட பணிகள் தரமாக நடைபெறுகின்றனவா என அப்பகுதி மக்களுடன் சென்று எம்எல்ஏ அருள் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, ஏரிக்கு மழைநீா் வரும் கால்வாயில் சாக்கடை நீா் கலக்காமல் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும், சூரிய ஒளி மின்விளக்குகள், ஏரியைச் சுற்றி கம்பிவேலி, கழிவறைகள், கண்காணிப்பு கேமரா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பின்னா், போடிநாயக்கன்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, சேலம் ஐந்து சாலை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிநவீன நிழற்கூடம் அமைக்கும் பணியை ஆய்வுசெய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதில், மாநகராட்சி உதவிப் பொறியாளா் முருகன், பாமக மாநகர மாவட்டத் தலைவா் இ.கோவிந்தன், மாவட்ட அமைப்புத் தலைவா் ந.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க