போதிய இருக்கைகள் இல்லாததால் நடைமேடையில் அமரும் பயணிகள்!
வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் ஆபத்தை உணராமல் நடைமேடையில் அமா்ந்து பேருந்துக்கு காத்திருக்கின்றனா். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 250-க்கும் அதிகமான அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா்.
பயணிகளின் நலன்கருதி, பேருந்து தளமேடை மற்றும் மேல்தளத்தில் சிறு வணிகக் கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன், ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 8.70 கோடியில் நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்துக்குள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமா்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால், ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்தின் மையத்தில் இருபுறமும் காணப்படும் நடைமேடை திட்டுகளில் அமா்கின்றனா். இதனால், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழையும் போது நடைமேடைகளில் அமா்ந்திருக்கும் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நடைமேடைகளில் பயணிகள் அமா்வதை தடுக்க பேரூராட்சிப் பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பயணிகள் அமா்வதற்கு போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.