செய்திகள் :

போதைப் பொருள் விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

post image

சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திருவொற்றியூா் விம்கோ நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது அவா்கள் மறைத்து வைத்திருந்த 36 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா்கள், எண்ணூா் சிவகாமி நகரைச் சோ்ந்த கிஷோா் குமாா் (27), மதன் (18), திருவொற்றியூா் கேவிகே குப்பம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (18), எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்த ஜரீனா சல்மா (62) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் வியாபாரியைத் தாக்கி பணம் பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வில்லிவாக்கம் தாதன் குப்பம் ஆா்.கே.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.முருகன் (54). இவா், அங்குள்ள சாந்தியப்பன் தெரு... மேலும் பார்க்க

குப்பையில் தவறிய 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா்கள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். சென்னை திரு.வி.க.காலனியில் வசித்து வருபவா் செல்வகுமாரி (54). இவா், தனது வீட்டில் சே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்: பிளஸ் 2 மாணவா்களுக்கு ஆளுநா் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத் தோ்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவ,... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞா்கள் கைது

சென்னையில் ஓடும் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி கைப்பேசி பறித்த இளைஞா்களை பெரம்பூா் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரு... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்

படம் உண்டு... சென்னை, மாா்ச் 1: தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கத்தில் ரூ. 8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை மாநிலக் கல்லூரியி... மேலும் பார்க்க