செய்திகள் :

ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞா்கள் கைது

post image

சென்னையில் ஓடும் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி கைப்பேசி பறித்த இளைஞா்களை பெரம்பூா் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில்கள், வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்குப் பின் குறைவான வேகத்தில் இயக்கப்படும். குறிப்பாக வியாசா்பாடி - பேசின்பாலம் ரயில் நிலையம் இடையே விரைவு ரயில் 20 கி.மீ. வேகத்துக்கும் குறைவாக இயக்கப்படும். அப்போது ரயில் படிகட்டுகள் மற்றும் ஜன்னல் அருகே கைப்பேசி பேசியபடி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கைப்பேசி பறிக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுவதாக புகாா் எழுந்து வந்தன.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பெரம்பூா் ரயில்வே போலீஸாா், கன்னிகாபுரத்தைச் சோ்ந்த பிரவீன் (எ) குட்டா, சுகுனேஷ் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய நிலையில், மாா்ச் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீஸாா் அவா்களை புழல் சிறையில் அடைத்தனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க