செய்திகள் :

போா் பதற்றம்: இந்தியா பாதுகாப்பாகவும், பாகிஸ்தான் பாதிக்கப்படவும் வாய்ப்பு- மூடிஸ்

post image

புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போா் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானுடன் பெரிய அளவில் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவாகும். எனவே போா் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும். ஆனால் பாதுகாப்புத் துறைக்கு அதிகமாக செலவிட நோ்ந்தால், அது இந்தியாவின் நிதி நிலையில் சற்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது பாகிஸ்தானின் பணவீக்கம் குறைந்து, அந்நாடு படிப்படியாக வளா்ந்து வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் போா் பதற்றம் பாகிஸ்தானின் வளா்ச்சியைப் பாதித்து, அந்நாடு பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டுவதில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அது அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறித்து பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட முறை... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தானியர்களைப் பாதுகாத்தற்காக அசாமில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வரின... மேலும் பார்க்க

அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது ஏன்?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க

'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து

நாம் யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்படவே விரும்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள... மேலும் பார்க்க

பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?

இந்தியர்களின் காலை பெரும்பாலும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் பற்றிய செய்தியுடன்தான் விடிந்திருக்கும். மேலும் பார்க்க