செய்திகள் :

ம.பி: ஒரு சுவருக்கு பெயின்ட் அடிக்க 233 வேலையாட்கள்... திகைக்க வைத்த 'அரசுப் பள்ளி' பில்!

post image

மத்தியபிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு பணியின் செலவீன விவரங்கள் பொது மக்களை திகைக்க வைத்துள்ளது.

சகண்டி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள ஒரு சுவரில் 4 லிட்டர் பெயின்ட் அடிக்க 165 தொழிலாளர்கள் மற்றும் 68 கொத்தனார்கள் பணியமர்த்தப்பட்டதாக பில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த பில் வைரலானது. இதில் 4 லிட்டர் பெயின்ட் அடிக்க 1.07 லட்சம் செலவானது தெரியவந்துள்ளது. அதேப்போல நிபானியா கிராமத்தில் உள்ள மற்றொரு இடத்தில் 20 லிட்டருக்கு ரூ.2.3 லட்சம் செலவாகியிருப்பதும் வெளிவந்திருக்கிறது.

குளறுபடிகள்

நிபானியாவில் 10 ஜன்னல்கள் மற்றும் நான்கு கதவுகளில் வேலை செய்ய 275 தொழிலாளர்களும் 150 கொத்தனார்களும் பணியமர்த்தப்பட்டனர்.

பில்

இதுமட்டுமல்லாமல் ஆவணங்களிலும் குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனமான சுதாகர் கன்ஸ்ட்ரக்ஷன், மே 5, 2025 தேதியிட்ட ஒரு பில்லை சமர்பித்துள்ளது, ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே - ஏப்ரல் 4 அன்று - நிபானியா பள்ளியின் முதல்வரால் அந்த பில் சரிபார்க்கப்பட்டதாகக் கணக்குகாட்டப்பட்டுள்ளது.

சட்டப்படி இந்த பில்களில் பணிக்கு முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்கள் இணைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த பில்களில் எந்தப் புகைப்படமும் இணைக்கப்படாமல் இருந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட கல்வி அலுவலர் பூல் சிங் மார்பாச்சி, "சமூக வலைத்தளங்களில் வைரலான பில்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டறியப்படும் உண்மைகள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ் தாக்கரே கட்சியினர்

மகாராஷ்டிராவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி படிக்கவேண்டும் என்று ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவினர் கோரி வருகின்றனர். மும்பை மீராபயந்தர் பகுதியில் கடைக்காரர் ஒருவர் மராத்தி... மேலும் பார்க்க

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை ப... மேலும் பார்க்க

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரண... மேலும் பார்க்க

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களு... மேலும் பார்க்க

Nipah virus: கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரி... மேலும் பார்க்க

12-ம் வகுப்பில் 26 முறை தோல்வி; ஆனாலும் பி.ஹெச்டி முடித்து முனைவரான பஞ்சாயத்து தலைவர்!

படிப்புக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள். சிலர் முதுமை காலத்திலும் படிப்பை தொடருவார்கள். குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகும் 12வது வகுப்ப... மேலும் பார்க்க