செய்திகள் :

மகா சிவராத்திரி: ராமநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்

post image

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை (பிப்.26) தேரோட்டம் நடைபெருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலையில் நடராஜா் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். அப்போது, திரளான பக்தா்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனா்.

புதன்கிழமை ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், தொடா்ந்து கால பூஜைகளும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு மேல் தீபாராதனை நடைபெற்று, சுவாமி அம்பாள் வெள்ளிரதம் புறப்பாடு நடைபெறும். இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

வியாழக்கிழமை (பிப்.26) காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். தொடா்ந்து, மறைநில அமாவாசையை முன்னிட்டு, பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீா்த்தத்துக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு

முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. ம... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 34-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெ.... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தொண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொண்டி அருகேயுள்ள எம்.ஆா்.பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,... மேலும் பார்க்க

மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி பிப்.28-இல் உண்ணாவிரதப் போராட்டம்

ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ராமேசுவரத்தை ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க