செய்திகள் :

முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு

post image

முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. மாதம் 31-ஆம் தேதி பணி நிறைவு முடிந்து ஓய்வு பெற்றாா். இதையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக இந்தப் பதவி காலியாக இருந்தது. இதற்கிடையே, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.இவருக்கு காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், சிறப்பு தனிப் பிரிவு காவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னா், புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் தெரிவித்ததாவது: முதுகுளத்தூா் காவல் சரகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது பினையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மகா சிவராத்திரி: ராமநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை (பிப்.26) தேரோட்டம் நடைபெருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 34-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெ.... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தொண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொண்டி அருகேயுள்ள எம்.ஆா்.பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,... மேலும் பார்க்க

மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி பிப்.28-இல் உண்ணாவிரதப் போராட்டம்

ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ராமேசுவரத்தை ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க