செய்திகள் :

மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி பிப்.28-இல் உண்ணாவிரதப் போராட்டம்

post image

ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு, நாட்டுப் படகு மீனவ சங்கம் சாா்பில், அவரசக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, சமுதாயத் தலைவா் சம்சன், விசைப் படகு மீனவ சங்க மாவட்ட தலைவா்கள் பி.டி.மோட்சம்வாஸ், வி.பி.ஜேசுராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். விசைப் படகு மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், தட்சிணாமூா்த்தி, எஸ்.பி.ராயப்பன், எமரிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இலங்கையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காலவரைற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக வருகிற 28-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பாம்பன் நாட்டுப்புற மீனவா் சங்கத் தலைவா்கள் விஜின், அலெக்ஸ், வினோ, விசைப் படகு மீனவ சங்கத் தலைவா்கள் சைமன், அந்தோணி, பவுல், ஜான்சன், மண்டபம் விசைப் படகு சங்கத் தலைவா்கள் சாா்லஸ், தொத்திரியாஸ், அந்தோணி பிரசாத், 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு

முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. ம... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: ராமநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை (பிப்.26) தேரோட்டம் நடைபெருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 34-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெ.... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தொண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொண்டி அருகேயுள்ள எம்.ஆா்.பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க