செய்திகள் :

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்தது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி: கார்கே

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஏஐசிசி கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, மோடி அரசு தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசு சொத்துக்களை விற்று ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் குற்றம் சாட்டினார். மின்னணு வாக்குச் சீட்டிலிருந்து மின்னணு இயந்திரத்துக்கு மாறி வருகிறது. ஆனால் நாம் மின்னணு இயந்திரத்தையே மாற்றுகிறார்கள். இவை அனைத்தும் மோசடியே. ஆளும் கட்சிக்கு நன்மையளிக்கவும், எதிர்க்கட்சியை பாதகப்படுத்தும் நுட்பங்களை பாஜக வகுத்து வருகிறார்கள்.

மகாராஷ்டிரத்தில் நடந்தது என்ன? தேர்தல் மோசடி குறித்த பிரச்னையை காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அவர்கள் எந்த மாதிரியான வாக்காளர் பட்டியலைத் தயாரித்தார்கள்? ஹரியாணா தேர்தலிலும் இதேதான் நடந்தது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.

பாஜக 90 சதவீத இடங்களை வென்றதைச் சுட்டிக்காட்டிய கார்கே, மகாராஷ்டிர தேர்தலில் நடந்தது போன்ற மோசடி, இதற்கு முன்பு நடந்ததில்லை. இது ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்டது என்று கார்கே குற்றம் சாட்டினார்.

பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் தலித்துகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது தலித் சிறுமி செவ்வாயன்று (ஏப். 15) காணாமல் போனார், ... மேலும் பார்க்க

விவசாயிகளிடம் 31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல்!

சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய... மேலும் பார்க்க

மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரச... மேலும் பார்க்க

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க