காமராஜா் விருது பெற்ற பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்தது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி: கார்கே
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
ஏஐசிசி கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, மோடி அரசு தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசு சொத்துக்களை விற்று ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் குற்றம் சாட்டினார். மின்னணு வாக்குச் சீட்டிலிருந்து மின்னணு இயந்திரத்துக்கு மாறி வருகிறது. ஆனால் நாம் மின்னணு இயந்திரத்தையே மாற்றுகிறார்கள். இவை அனைத்தும் மோசடியே. ஆளும் கட்சிக்கு நன்மையளிக்கவும், எதிர்க்கட்சியை பாதகப்படுத்தும் நுட்பங்களை பாஜக வகுத்து வருகிறார்கள்.
மகாராஷ்டிரத்தில் நடந்தது என்ன? தேர்தல் மோசடி குறித்த பிரச்னையை காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அவர்கள் எந்த மாதிரியான வாக்காளர் பட்டியலைத் தயாரித்தார்கள்? ஹரியாணா தேர்தலிலும் இதேதான் நடந்தது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
பாஜக 90 சதவீத இடங்களை வென்றதைச் சுட்டிக்காட்டிய கார்கே, மகாராஷ்டிர தேர்தலில் நடந்தது போன்ற மோசடி, இதற்கு முன்பு நடந்ததில்லை. இது ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்டது என்று கார்கே குற்றம் சாட்டினார்.