செய்திகள் :

மக்களே உஷார்! யாசகம் கேட்பது போல வந்து திருடும் வடமாநில கும்பல்!

post image

கோவை : யாசகம் கேட்பது போல் வந்து திருடிய வடமாநில பெண்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது போல் வந்த 7 வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள கம்பெனியில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை திருடிச் சென்று உள்ளனர்.

இது தொடர்பாக கம்பெனியின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோவை சரவணம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒரு பெண்மணி கம்பெனியில் உள்ள பாத்ரூமில் வைக்கப்பட்டு இருந்த பெனாயில் பாட்டிலையும் திருடிச் சென்றது சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது.

இதுபோல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரெனும் சுற்றித் திரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தல்.

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க

முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்!

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 29) ... மேலும் பார்க்க

சென்னை வியாசர்பாடி தீ விபத்து: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்! - தமிழக அரசு விளக்கம்

சென்னை வியாசர்பாடி தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகள் வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:செ... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாகத் தொடங்... மேலும் பார்க்க