இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
பாகிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவாவின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், நேற்று (மே 28) மாலை பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், ராணுவ இடைநிலை அதிகாரி உள்பட 4 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இருப்பினும், இதுகுறித்து ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாகாணத்தின் முஸாகெல் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த பயங்கரவாதிகள் ரார்ரா ஷாம் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் நவீன வெடிகுண்டுகளைப் பொருத்தியபோது, பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அந்த பயங்கரவாதிகள் அனைவரும் அப்பகுதியில் பயணிகள் பேருந்தின் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிரம்ப் வரிவிதிப்புக்கு தடை! இந்தியா போரை நிறுத்தியதாக மீண்டும் சர்ச்சைப் பேச்சு!