செய்திகள் :

நேபாளத்தில் 18வது குடியரசு நாள்: மன்னராட்சி ஆதரவாளர்கள் பேரணி!

post image

நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்களின் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் இடையே அந்நாட்டு அரசு 18வது குடியரசு நாளைக் கொண்டாடியுள்ளது.

நேபாள நாட்டில், இன்று (மே 28) 18-வது குடியரசு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அந்நாட்டின் ராஷ்டிரிய பிரஜதந்திரா கட்சியின் (ஆர்பிபி) தலைமையிலான மன்னராட்சி ஆதரவாளர்கள் போராட்டப் பேரணி நடத்தியுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்நாட்டை ஆளும் சிபிஎன் - யூஎம்எல் கூட்டணி அரசு, வன்முறைகளைத் தவிர்க்க ரத்னாபார்க் மற்றும் பிரிகுதிமண்டபம் ஆகிய பகுதிகளில், சுமார் 6,000 பாதுகாப்புப் படையினரைக் குவித்து அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசு சார்பில் பிரிகுத்மண்டபம் பகுதியில் நடைபெற்ற குடியரசு நாள் நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் பாரம்பரிய மற்றும் கலாசார ரீதியான ஆடைகளை அணிந்து கலந்துக்கொண்டனர்.

இதேவேளையில், தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி கட்சியின் முக்கிய தலைவர்கள், நேபாளத்தின் முன்னாள் அரசர் ஞானேந்திராவின் புகைப்படத்தைக் கையில் ஏந்தி, மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வந்து நேபாளத்தை ஹிந்து நாடாக உருமாற்ற வலியுறுத்தி பேரணியாகச் சென்றனர்.

மதியம் 2 மணியளவில் தொடங்கிய இந்தப் பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் அந்நகரத்தின் பல்வேறு பகுதிகளின் வழியாகச் சென்று, குடியரசு ஆட்சிக்கும், அரசுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

இருப்பினும், நேபாளத்தின் பல்வேறு இடங்களில் 18வது குடியரசு நாள் மிகவும் விமர்சையாகவே கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராமச்சந்திரா பௌதேல், பிரதமர் சர்மா ஒலி மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் துண்டிகேல் திறந்தவெளி மைதானத்திலுள்ள ராணுவ அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக, கடந்த 2008-ம் ஆண்டு மே 28 ஆம் தேதியன்று அந்நாட்டின் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கொண்டு வரப்பட்டு நேபாளம் குடியரசு நாடாக அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ காலமானார்!

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில்,... மேலும் பார்க்க

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் ப... மேலும் பார்க்க

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவராக எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க