செய்திகள் :

டிரம்ப் வரிவிதிப்புக்கு தடை! இந்தியா போரை நிறுத்தியதாக மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

post image

உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க வணிக நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிகளவிலான வரி விதிப்பதாகக் கூறி, அந்நாடுகளின் மீது பரஸ்பர வரியை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனிடையே, வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரிவிதிப்பு உத்தரவை தடை செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பில் கூறியதாவது, அமெரிக்க அரசியலமைப்பின்படி, வெளிநாடுகளுடனான வணிக ஒழுங்குகளை, அமெரிக்க பேரவையான காங்கிரஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், அதிகாரத்தின் மூலம் அவசரகாலச் சட்டங்களை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். அதாவது, பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் நாடுகள் மீது பொருள் முடக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் சட்டமான சர்வதேச அவசர பொருளாதாரச் சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார்.

இந்தச் சட்டத்தை முதன்முறையாக வரிவிதிப்புக்கு டிரம்ப் உட்படுத்தியுள்ளார். அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, வரிகளை அதிபர் விதிக்க இயலாது. ஆகையால், டிரம்ப்பின் இந்த செயல் சட்டவிரோதமானது.

தனது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததுடன், ஆசிய பங்குச் சந்தைகளும் மேல்நோக்கிச் சென்றன.

அதுமட்டுமின்றி, தனது வரிவிதிப்பு உத்தரவால்தான், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவியது என்று டிரம்ப் கூறி வந்தார். ஆனால், டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அதிபர் டிரம்ப் மட்டுமே கூறி வந்தநிலையில், தற்போது அமெரிக்க அரசு தரப்பில் இருந்தும் அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு தரப்பிலான இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மட்டும் அமெரிக்கா, சௌதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளில் 8 முறை கூறியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டு அரசும் கூறுவது குழப்பத்தில் ஆழ்ப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:டிரம்ப் அரசின் முக்கிய மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு!

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில்,... மேலும் பார்க்க

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் ப... மேலும் பார்க்க

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவராக எலான் மஸ்க்கின் கடைசி வேலை நாள் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க