செய்திகள் :

மக்கள் அரசிடம் பிச்சையெடுக்கிறார்கள்: பாஜக அமைச்சர் பேச்சுக்கு காங். கண்டனம்!

post image

போபால் : அரசிடம் மக்கள் பிச்சையெடுக்கிறார்கள் என்று பாஜக தலைவர் பிரஹலாத் சிங் படேல் பேசியிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பொது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பாரதீய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தில், பஞ்சாயத்து மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் பிரஹலாத் சிங் படேல், ராஜ்கர் மாவட்டத்தில் சனிக்கிழமை(மார்ச் 1) நடைபெற்ற வீராங்கனா ராணி அவந்திபாய் லோதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது மேடையேறிய அவர் மக்களை நோக்கி, “அரசிடமிருந்து பிச்சையெடுக்கும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் எவரேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் அவர்களிடம் பெட்டி நிறைய கோரிக்கை மனுக்கள் அளிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. தலைவர்கள் மேடையேறும்போதோ, அவர்களுக்கு மாலை அணிவித்துவிட்டு தாங்கள் கையில் எடுத்துவரும் மனுக்களையும் கொடுத்துவிடுகின்றனர். இது நல்ல பழக்கம் அல்ல.”

“ஒருவரிடமிருந்து கேட்பதற்குப் பதிலாக, கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த முடியும்; கலாச்சாரமான சமுதாயத்தை கட்டமைக்கவும் இது உதவும்.

இத்தகைய பிச்சையெடுக்கும் மக்களால் வலிமையானதொரு சமுதாயம் உருவாகாது; சமூகம் பலவீனமேயடையும். இலவசங்களை நோக்கி ஈர்க்கப்படுவது வீர மங்கையருக்கான அடையாளமல்லவே. வீர மரணமடைந்த ஒரு வீரர் எப்போது உண்மையாக மதிக்கப்படுகிறார் என்றால், அவரது மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழும்போதுதான்” என்றார்.

மத்திய பிரதேச அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜீது பட்வாரி கூறியிருப்பதாவது: ”அமைச்சரின் பேச்சால் மாநில மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் அராஜகம் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. அதன் வெளிப்பாடாக, இப்போது அவர்கள், மக்களை பிச்சைக்காரர்கள் எனக் குறிப்பிடும் அளவுக்கு போய்விடனர். கடினமான சூழலில் கண்ணீரில் வாழும் மக்களின் நம்பிக்கையானது மேற்கண்ட அமைச்சரின் கருத்தால் அவமதிக்கப்பட்டுவிட்டது ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க

கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி

கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா ... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வர... மேலும் பார்க்க

முதல்வராகிறாரா சிவக்குமார்? கர்நாடக அமைச்சர், எம்எல்ஏக்கள் பேச்சால் சர்ச்சை!

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, கர்நாடக காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் அமைச்சரின் ... மேலும் பார்க்க

78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!

நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலாறு ஹதி என்ற பழங்குடியின ... மேலும் பார்க்க