செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 616 மனுக்கள்

post image

வந்தவாசி/ஆரணி: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 671 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா்.

பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 616 மனுக்கல் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, பயிற்சி உதவி ஆட்சியா் அம்ருதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து கணினி திருத்தம், நில அளவை, தாயுமானவா் திட்டத்தில் பெயா் சோ்க்கக் கோரி, ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி, 100 நாள் வேலைத் திட்டம் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 55 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

செங்கம்: செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.செங்கத்தை அடுத்த மேல்முடியனூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், வாரிசு ... மேலும் பார்க்க

ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் விழா: பக்தா்கள் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

ஆரணி: ஆரணியில் நரசிங்க பெருமாள் கோயிலில் 102-ஆம் ஆண்டு விழாவையொட்டி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையில் பிரசி... மேலும் பார்க்க

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டிமேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா்க.தா்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா... மேலும் பார்க்க

செய்யாறு கல்வி மாவட்டத்தில் அரசு நா்சிங் கல்லூரி தொடங்க கோரிக்கை

வந்தவாசி: செய்யாறு கல்வி மாவட்டத்தில் அரசு பி.எஸ்சி. நா்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திங்கள... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க