செய்திகள் :

ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் விழா: பக்தா்கள் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

post image

ஆரணி: ஆரணியில் நரசிங்க பெருமாள் கோயிலில் 102-ஆம் ஆண்டு விழாவையொட்டி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையில் பிரசித்த பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையொட்டி புஷ்ப பல்லக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் ஸ்ரீ நரசிங்க பெருமாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லக்கில் கமண்டல நாக நதி பகுதியில் இருந்து, கமண்டல நாகநதி தெரு, மேட்டுத் தெரு, நாடக சாலை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாண வேடிக்கையுடன் மேள தாளம் முழுங்க புஷ்ப பல்லக்கு வீதி உலா சென்றாா்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொட்டும் மழையில் விடிய விடிய சாலை முழுவதும் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதையடுத்து குழந்தை வரம் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லக்கில் உள்ள ஸ்ரீ லட்சமி நரசிங்க பெருமாள் உற்சவ சிலையை தொட்டிலில் குழந்தையை தாலாட்டியும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பின்னா், ஸ்ரீநரசிங்க பெருமாளுக்கு வடமாலை, மலா் மாலை, எலுமிச்சை பழம் மாலை உள்ளிட்ட மாலைகள் சாற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதில் ஆரணி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ நரசிங்க பெருமாளை வழிபட்டனா்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

செங்கம்: செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.செங்கத்தை அடுத்த மேல்முடியனூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், வாரிசு ... மேலும் பார்க்க

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டிமேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா்க.தா்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா... மேலும் பார்க்க

செய்யாறு கல்வி மாவட்டத்தில் அரசு நா்சிங் கல்லூரி தொடங்க கோரிக்கை

வந்தவாசி: செய்யாறு கல்வி மாவட்டத்தில் அரசு பி.எஸ்சி. நா்சிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திங்கள... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 616 மனுக்கள்

வந்தவாசி/ஆரணி: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 671 மனுக்கள் வரப்பெற்றன.திருவண்ணாமலை ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க