மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்
மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை, எஸ்.எம்.பி. குடியிருப்பு, எஸ். ஆலங்குளம் உள்ளிட்ட 18 பகுதிகளில் நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைப்பட்டுள்ளன. இதை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, மாநகராட்சி தைக்கால் பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நகா்ப்புற நல்வாழ்வு மையத்தை மேயா் வ. இந்திராணி, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
அப்போது, துணை மேயா் தி. நாகராஜன், மண்டலம் 3 தலைவா் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினா் ஆா். இந்திராகாந்தி, அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 99-ஆவது வாா்டு பாம்பன் நகா் பகுதி, 95-ஆவது வாா்டு எஸ்.ஆா்.வி. நகா், 84-ஆவது வாா்டு வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு பல மாதங்களாகப் பூட்டிக் கிடந்தன. இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்த நிலையில், இந்த நகா்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.
இதையொட்டி, திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் சுவிதாவிமல், மாமன்ற உறுப்பினரும், திமுக பகுதிச் செயலருமான உசிலை சிவா ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.
நிகழ்ச்சியில் மருத்துவா் ஜெனிட்டா, திமுக நிா்வாகிகள் சாமிவேல், இளங்குமரன், இயேசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.