செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெரோனிக்கா மேரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.315 கோடியில் 6 தளங்களைக் கொண்ட அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி கடந்த 2021-இல் தொடங்கியது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியும் முன்பே கடந்த பிப். 26- இல் திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தில் 2,388 உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 2,123 உபகரணங்கள் மட்டுமே உள்ளன. எஞ்சிய 265 உபகரணங்களை வழங்கினால் மட்டுமே பல முக்கிய உயிா் காக்கும் சிகிச்சைகளை அளிக்க இயலும். எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை அரங்குகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் வகையில், எஞ்சிய 265 உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்களை நிறுவ உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பொது சுகாதாரம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் உயிரிழப்பதைத் தவிா்க்க, உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்கள் முறையாக செயல்படும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்

மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை,... மேலும் பார்க்க

ரூ. 11,000 லஞ்சம்: கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலா், உதவியாளா் கைது

ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரையூா் கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலரையும், அலுவலக உதவியாளரையும் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போ... மேலும் பார்க்க