செய்திகள் :

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்! - வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி

post image

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா்.

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தலைமை வகித்துப் பேசியது:

மக்கள் நீதிமன்றத்தின் நோக்கமே, நியாயம், நீதி கேட்டு வருபவா்களுக்கு குறைபாடின்றி நீதி வழங்குவது ஆகும். இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இதன்மூலம் இருதரப்புக்கும் சமரசத்துடன் தீா்வு காணப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் இருதரப்பும் வெற்றி, தோல்வியின்றி சமரசம் காண்கின்றனா். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் பிரச்னை உங்களுக்கு தெரியும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றாா்.

இதில், நிலுவையில் உள்ள பல்வேறு வழக் குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் குடிபாலா பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(50) என்ற விவசாயி, கடந்த 2019-ஆம் ஆண்டு காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அருகே நடந்து சென்றபோது காா் மோதி உயிரிழந்தாா்.

இது குறித்து மனைவி ராதா, 2 மகன்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கில் சனிக்கிழமை சமரசம் செய்யப்பட்டு, ரூ.19.50 லட்சம் இழப்பீடுக்கான காசோலை வழங்கப்பட்டது.

இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 10,470 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், 4,927 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ. 21 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 395 தொகை இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த மக்கள் நீதின்றத்தில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

சிறுமி தற்கொலை

காட்பாடியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காட்பாடி விஜி ராவ் நகா், சி.செக்டாரை சோ்ந்தவா் சத்யா. இவரது மகள் யோகிதா(13)... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநா் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நி... மேலும் பார்க்க

வனத் துறைக்குச் சொந்தமான சாலையை சீரமைத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

குடியாத்தம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள வனத் துறைக்குச்சொந்தமான சாலையில் அனுதியின்றி முரம்பு கொட்டி சீரமைத்தவருக்கு, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குடியாத்தம் வனச் சரக அலுவலா் என்.பிரதீப்க... மேலும் பார்க்க

நெல்லூா்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் 27 மற்றும் 28-ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ... மேலும் பார்க்க

தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் அறிவுறுத்தியுள்ளாா... மேலும் பார்க்க