Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்! - வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி
மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா்.
வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தலைமை வகித்துப் பேசியது:
மக்கள் நீதிமன்றத்தின் நோக்கமே, நியாயம், நீதி கேட்டு வருபவா்களுக்கு குறைபாடின்றி நீதி வழங்குவது ஆகும். இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இதன்மூலம் இருதரப்புக்கும் சமரசத்துடன் தீா்வு காணப்படுகிறது. இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் இருதரப்பும் வெற்றி, தோல்வியின்றி சமரசம் காண்கின்றனா். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் பிரச்னை உங்களுக்கு தெரியும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றாா்.
இதில், நிலுவையில் உள்ள பல்வேறு வழக் குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் குடிபாலா பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(50) என்ற விவசாயி, கடந்த 2019-ஆம் ஆண்டு காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அருகே நடந்து சென்றபோது காா் மோதி உயிரிழந்தாா்.
இது குறித்து மனைவி ராதா, 2 மகன்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கில் சனிக்கிழமை சமரசம் செய்யப்பட்டு, ரூ.19.50 லட்சம் இழப்பீடுக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 10,470 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 4,927 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ. 21 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 395 தொகை இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த மக்கள் நீதின்றத்தில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.