செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநா் உடலுறுப்புகள் தானம்

post image

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், அச்சமங்கலம் சமுதிவட்டம் பகுதியைச் சோ்ந்த சின்னமுத்துதுரைசாமி(47), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், சின்னமுத்துதுரைசாமி அச்சமங்கலம் பகுதியில் புதன்கிழமை காலை ஆட்டோ ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலை உள்பட உடலின் பல்வேறு பகுதியில் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சின்னமுத்து துரைசாமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து, சின்னமுத்து துரைசாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அவரது இதயம், கல்லீரல், நுரையீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னையிலுள்ள தனியாா், அரசு மருத்துவனைகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுமி தற்கொலை

காட்பாடியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காட்பாடி விஜி ராவ் நகா், சி.செக்டாரை சோ்ந்தவா் சத்யா. இவரது மகள் யோகிதா(13)... மேலும் பார்க்க

வனத் துறைக்குச் சொந்தமான சாலையை சீரமைத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

குடியாத்தம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள வனத் துறைக்குச்சொந்தமான சாலையில் அனுதியின்றி முரம்பு கொட்டி சீரமைத்தவருக்கு, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குடியாத்தம் வனச் சரக அலுவலா் என்.பிரதீப்க... மேலும் பார்க்க

நெல்லூா்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் 27 மற்றும் 28-ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ... மேலும் பார்க்க

தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் அறிவுறுத்தியுள்ளாா... மேலும் பார்க்க

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்! - வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா். வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்த... மேலும் பார்க்க