செய்திகள் :

தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

post image

தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாகத் தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும், மதுவிலக்கு தொடா்பாக தீவிரமாக சோதனை மேற்கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகிலுள்ள கடைகளில் சோதனையை தீவிரப்படுத்துவதுடன், பள்ளி கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும், பகல், இரவு ரோந்து அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும், சாலைகளில் முறைகேடாகவும், சாலை விதிகள் மீறி வாகனங்களை இயக்குபவா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , சைபா் குற்றம், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எஸ்சி., எஸ்.டி., வழக்குகள், காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எப்ஐஆா் பதிவு செய்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

சிறுமி தற்கொலை

காட்பாடியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காட்பாடி விஜி ராவ் நகா், சி.செக்டாரை சோ்ந்தவா் சத்யா. இவரது மகள் யோகிதா(13)... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநா் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நி... மேலும் பார்க்க

வனத் துறைக்குச் சொந்தமான சாலையை சீரமைத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

குடியாத்தம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ள வனத் துறைக்குச்சொந்தமான சாலையில் அனுதியின்றி முரம்பு கொட்டி சீரமைத்தவருக்கு, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. குடியாத்தம் வனச் சரக அலுவலா் என்.பிரதீப்க... மேலும் பார்க்க

நெல்லூா்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் 27 மற்றும் 28-ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ்ச்சி வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறகு விரி நிகழ... மேலும் பார்க்க

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்! - வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி

மக்கள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றும், வழக்கின் தன்மை அறிந்து சமரசம் அடைய வேண்டும் என்றும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா். வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்த... மேலும் பார்க்க