செய்திகள் :

மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை

post image

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விக்ரம் கப்பலின் புகைப்படங்களையும் ஐசிஜி பகிா்ந்து கொண்டது.

‘இந்திய கடலோரக் காவல் படை, கா்நாடகத்தின் நியூமங்களூரிலிருந்து லட்சத்தீவின் காட்மத் தீவுக்குச் செல்லும் போது மங்களூருவிலிருந்து 60 நானோ மீட்டா் தொலைவில் மூழ்கிய எம்எஸ்வி சலமத் கப்பலின் ஆறு பணியாளா்களை மீட்டது’ என்று கடலோர காவல்படை ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

‘ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விக்ரம் கப்பல் திருப்பி விடப்பட்டு, விரைவான மற்றும் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. உயிா் பிழைத்த அனைவரையும் மீட்டது. அவா்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு புதிய மங்களூா் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனா்’‘ என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

‘இது உயிா்களைக் காப்பாற்றுவதற்கும் நமது கடல்களைப் பாதுகாப்பதற்கும் ஐசிஜியின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது’ என்று அது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்

தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது. மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்... மேலும் பார்க்க

துருக்கி, அஸா்பைஜான் நாடுகளுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்த தில்லி வா்த்தகா்கள் உறுதி

பாகிஸ்தான், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை து... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகர... மேலும் பார்க்க

தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது

தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துணை ஆண... மேலும் பார்க்க

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து கொள்ளை: ஓட்டுநா், கூட்டாளி கைது

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து, அவா்களிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக... மேலும் பார்க்க