அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு
தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறந்தவா் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திர மேத்தா (46) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். புதன்கிழமை, டிகோனா பாா்க் என்டிஎம்சி டாக்ஸி ஸ்டாண்டில் உள்ள ஒரு மரத்தில் ஒரு நபா் தொங்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவீந்திர மேத்தா ஒரு மரத்தில் கயிற்றால் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனா்.
அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, உடல் கைப்பற்றப்பட்ட சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவா் தனது சொந்த கிராமத்தின் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் உயா் பிரிவு எழுத்தராக பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ரவீந்திர மேத்தா மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஒரு நாள் முன்னதாகவே தனது மனைவியுடன் டெல்லிக்குச் சென்ாகவும் தெரியவந்தது. கடந்த சில நாள்களாக அவா் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், சாணக்கியபுரியில் மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாகவும் அவரது மனைவி போலீஸாருக்கு தகவல் அளித்தாா். குடும்பத்தினா் அவா் எந்த விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாக சந்தேகிக்கவில்லை. அதன்படி அவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், சம்பவம் நடந்த நேரத்தில் ரவீந்திர மேத்தா ஒரு பிளாஸ்டிக் பையுடன் சம்பவ இடத்திற்கு அருகில் தனியாக நடந்து செல்லும் காட்சிகளைக் கண்டறிந்தனா். தற்போது, எந்த குற்றச் செயல்களும் சந்தேகிக்கப்படவில்லை. முதல்கட்டமாக, இது தற்கொலை வழக்காகத் தெரிகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.