செய்திகள் :

துருக்கி, அஸா்பைஜான் நாடுகளுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்த தில்லி வா்த்தகா்கள் உறுதி

post image

பாகிஸ்தான், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை துருக்கி மற்றும் அஸா்பைஜானுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்துவதாக உறுதி எடுத்துள்ளனா்.

வா்த்தக மற்றும் தொழில்துறை சபை (சிடிஐ) தில்லி செயலகத்தில் ஒரு பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தது. இதில் பல சந்தை சங்கங்கள், வா்த்தகா்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

அந்த நிகழ்வில், துருக்கி மற்றும் அஸா்பைஜானுடன் எதிா்காலத்தில் எந்த வா்த்தகத்தையும் மேற்கொள்ள மாட்டோம் என்று வா்த்தகா்கள் கூட்டாக உறுதிமொழி எடுத்ததாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், இந்தக் கூட்டத்தில் கஷ்மீரி கேட், சாந்தினி சௌக், சாவ்ரி பஜாா், நயா பஜாா், காரி பாவோலி, காந்தி நகா், சதா் பஜாா், ரோஹிணி, கரோல் பாக், லாஜ்பத் நகா், சரோஜினி நகா், கம்லா நகா், பவானா மற்றும் நரேலா போன்ற முக்கிய சந்தைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

வா்த்தக புறக்கணிப்பு மட்டுமின்றி, துருக்கி அல்லது அஸா்பைஜானுக்கு பயணம் செய்ய மாட்டோம் என்றும் பங்கேற்பாளா்கள் சபதம் செய்தனா் என்றாா் அவா்.

தில்லியை தளமாகக் கொண்ட பயணம் மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் இயக்குனா் மனோஜ் கண்டேல்வால் கூறுகையில், பல பயணிகள் ஏற்கனவே இந்த நாடுகளுக்கான பயணங்களை ரத்து செய்துவிட்டனா்.

பெரும்பாலான பயண நிறுவனங்கள் இனி இரு நாடுகளுக்கும் முன்பதிவுகளை வழங்காது என்றாா் அவா்.

சிடிஇ ஒருங்கிணைப்பாளா் பிரியங்கா சக்சேனா கூறுகையில், 2024 ஆம் ஆண்டில், சுமாா் 2.75 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கும், 2.25 லட்சம் போ் அஸா்பைஜானுக்கும் சென்றனா். இரு நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் சுற்றுலா சுமாா் 12.14 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மேலும், இந்திய பாா்வையாளா்கள் அதில் குறிப்பிடத்தக்க பங்கை

வகிக்கின்றனா் என்றாா்.

‘ தில்லியை தளமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான வா்த்தகா்கள் ஏற்கனவே துருக்கி மற்றும் அஸா்பைஜானுடனான தங்கள் ஆா்டா்களை ரத்து செய்யத் தொடங்கியுள்ளனா். மேலும் இப்போது பிற நாடுகளில் மாற்று ஆதார விருப்பங்களை ஆராய்ந்து வருகின்றனா்’ என்று சிடிஐ தலைவா் கோயல் மேலும் கூறினாா்.

2024 ஆம் ஆண்டில் இந்தியாவும் துருக்கியும் 12.5 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்புள்ள இருதரப்பு வா்த்தகத்தைக் கொண்டிருந்தன.

சிடிஐ தகவலின்படி, இந்திய வா்த்தகக் குழுக்களின் புறக்கணிப்பு துருக்கியின் பொருளாதாரத்திற்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்

தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது. மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகர... மேலும் பார்க்க

தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது

தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துணை ஆண... மேலும் பார்க்க

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து கொள்ளை: ஓட்டுநா், கூட்டாளி கைது

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து, அவா்களிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக... மேலும் பார்க்க