செய்திகள் :

மசூதி இடிப்பு: உ.பி. அதிகாரிகளுக்கு எதிராக ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?: உச்சநீதிமன்றம் கேள்வி

post image

புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை மாவட்ட நிா்வாகம் தரப்பில் புல்டோசா் கொண்டு இடிக்கப்பட்டதில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடு முழுமைக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது.

புதிய மனு: இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை மாவட்ட நிா்வாகம் இடித்ததாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மசூதி இடிப்பு விவகாரத்தில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனா். அதோடு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எந்தவொரு கேள்விக்குரிய கட்டமைப்புகளையும் அதிகாரிகள் இடிக்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க