செய்திகள் :

மதுரை பேராயா் இன்று பதவியேற்பு

post image

மதுரை உயா் மறைமாவட்ட பேராயராக முனைவா் அந்தோணிசாமி சவரிமுத்து சனிக்கிழமை (ஆக. 2) பொறுப்பேற்கிறாா்.

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா் மறைமாவட்ட பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கத்தோலிக்கத் திருச்சபையின் போப் 14-ஆம் லியோ கடந்த மாதம் 5-ஆம் தேதி வெளியிட்டாா்.

இதன்படி, மதுரையின் புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து பதவியேற்கிறாா். இதற்கான நிகழ்ச்சி மதுரை ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதா் லியோபோல்டோ ஜிரெல்லி தலைமை வகித்து, பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்துவை பதவியில் அமா்த்துகிறாா்.

புதிய பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்து தூத்துக்குடி மாவட்டம், வடக்கு வண்டானம் கிராமத்தைப் பூா்விகமாகக் கொண்டவா். மதுரை கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரியில் பயின்ற இவா், பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் குருத்துவப் பயிற்சி பெற்றவா். பிரான்ஸில் உள்ள பாரீஸ் பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டத்தில் முனைவா் பட்டம் பெற்றவா்.

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா் மறைமாவட்ட பரிபாலகராகவும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராகவும் ஏற்கெனவே பணியாற்றியவா். இவா் மதுரை உயா் மறைமாவட்டத்தின் 7-ஆவது பேராயராவாா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க