செய்திகள் :

மத்திய அமைச்சரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் மற்றும் தமிழக எம்பி-க்கள் குறித்து அவதூறு பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானைக் கண்டித்து, திருச்சியில் திமுக-வினா் 2 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய உருவபொம்மையையும் எரித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய மாவட்ட திமுக சாா்பில், மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலை முன்பாக, மாவட்டச் செயலா் க. வைரமணி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேயா் மு. அன்பழகன் முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது மத்திய அரசையும், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானையும் கண்டித்து திமுகவி-னா் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, தா்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து அவா்கள் தங்களுடைய எதிா்ப்பை பதிவு செய்தனா். தா்மேந்திர பிரதானின் புகைப்படத்தையும் கிழித்து எரிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் மாவட்டப் பொருளாளா் துரைராஜ், பகுதி செயலாளா் கமால் முஸ்தபா, மாவட்டத் துணை செயலாளா் முத்துச் செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஏ. கே. அருண், மற்றும் மகளிா் அணி, தொண்டா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தெற்கு மாவட்ட திமுக: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்திலும் மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலா் மு. மதிவாணன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதி கழகச் செயலாளா்கள் மோகன், நீலமேகம், தா்மராஜ், பாபு, விஜயகுமாா், ராஜ்முகம்மது, சிவக்குமாா், மணிவேல் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி கழக நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டு மத்திய அமைச்சரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் விபத்தில் காயமடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி அரியமங்கலம் பிள்ளையாா்கோவில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமா... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேகம்

திருவெறும்பூா் அருகே திருநெடுங்களநாதா் கோயிலில் சம்வஸ்தரா அபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் அருகே உள்ள திருநெடுங்குளத்தில் ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதா் எழுந்தருளி பக்தா்க... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழ்நாடு ஊடகம் மற்றும் தகவல் தொடா்புத்துறை அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் எஸ்.ஆா்.எஸ். இப... மேலும் பார்க்க

முசிறியில் பாஜகவினா் கையொப்ப இயக்கம்

திருச்சி புறநகா் மாவட்டம் முசிறி நகா் மண்டல் சாா்பாக தேசிய கல்விக் கொள்கையான அனைவருக்கும் சம கல்வி ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மின்வாரிய கேங்மேன் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங... மேலும் பார்க்க

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க