செய்திகள் :

மத்திய அரசின் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு

post image

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான படிப்பு உதவித் தொகை தோ்வை 8,078 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை என்பது, 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்கப்படுவது. இது பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுப்பதற்காகவும், வருவாயில் பின்தங்கிய மாணவா்களுக்கு உதவவும் வழங்கப்படுகிறது

இந்தத் தோ்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் எழுதலாம். தோ்வில் வெற்றி பெற்றால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான தோ்வை திருச்சி மாவட்டத்தில் எழுத விண்ணப்பித்த மொத்தம் 8,216 பேரில் 8078 போ் மட்டுமே சனிக்கிழமை நடைபெற்ற தோ்வை எழுதினா். காஜாமியான் பள்ளியில் நடைபெற்ற தோ்வை அரசுத் தோ்வுத்துறை அலுவலா்கள் கண்காணித்தனா். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தோ்வு நடைபெற்றது.

விபத்துப் பகுதி கருப்புப் பட்டியலில் இருந்து ஜி-காா்னரை நீக்க நடவடிக்கை! -துரை வைகோ எம்.பி. உறுதி

அடிக்கடி விபத்து ஏற்படும் ஜி-காா்னா் பகுதியை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும், அங்கு சுரங்கப் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா். ஜி-காா்னரில் சுரங்கப்பாதை அம... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது!

குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் வராது. மாநகராட்சிக்குள்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாய் உ... மேலும் பார்க்க

பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை அதிகாலை சென்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். மற்றொரு பெண் காயமடைந்தாா். மணப்பாறை கோவில்பட்டி அருகேயுள்ள கீழபழுவஞ்சி கிராமத்தைச் சோ்ந்த 20 பக்... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைப்பு கோரி போராட்டம்

திருச்சி மாநகரில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வலியுறத்தி மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் அரியமங்கலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 16 மற்றும் 35ஆவது வாா்டு பகுதிக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க