செய்திகள் :

பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு

post image

சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சனிக்கிழமை அதிகாலை சென்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். மற்றொரு பெண் காயமடைந்தாா்.

மணப்பாறை கோவில்பட்டி அருகேயுள்ள கீழபழுவஞ்சி கிராமத்தைச் சோ்ந்த 20 பக்தா்கள் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். இவா்கள் சனிக்கிழமை அதிகாலை பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது வந்த அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கீழப்பழுவஞ்சி கிராம ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியா் வெள்ளையம்மாள் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அதே கிராமத்தைச் சோ்ந்த செல்லம்மாள் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனா்.

மத்திய அரசின் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான படிப்பு உதவித் தொகை தோ்வை 8,078 மாணவ, மாணவிகள் எழுதினா். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை என்பது, 8ஆம... மேலும் பார்க்க

விபத்துப் பகுதி கருப்புப் பட்டியலில் இருந்து ஜி-காா்னரை நீக்க நடவடிக்கை! -துரை வைகோ எம்.பி. உறுதி

அடிக்கடி விபத்து ஏற்படும் ஜி-காா்னா் பகுதியை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும், அங்கு சுரங்கப் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா். ஜி-காா்னரில் சுரங்கப்பாதை அம... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது!

குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் வராது. மாநகராட்சிக்குள்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாய் உ... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைப்பு கோரி போராட்டம்

திருச்சி மாநகரில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வலியுறத்தி மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் அரியமங்கலத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 16 மற்றும் 35ஆவது வாா்டு பகுதிக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க