செய்திகள் :

மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது: ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு

post image

சேவூா்- புளியம்பட்டி சாலையில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

அவிநாசி வட்டத்துக்குள்பட்ட வருவாய் தீா்வாயம் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சந்திரசேகா், துணை வட்டாட்சியா் கெளரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சேவூா், முறியாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் விவசாயத் தொழிலாளா்கள், பனியன் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். மேலும், இந்தப் பகுதியில் அனுமதிபெற்ற ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.

இந்நிலையில், இப்பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானகடை அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முறியாண்டம்பாளையம், சேவூா் ஆகிய இரு ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட சேவூா்-புளியம்பட்டி சாலையில் அமைவதால், இரு கிராம மக்களும் பாதிப்பிற்குள்ளாவாா்கள்.

மேலும், மனமகிழ் மன்றம் அமையப் பெற்றால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் ஏற்படும். எனவே, மதுபான கடையோ அல்லது மனமகிழ் மன்றமோ திறக்க அனுமதி வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த வருவாய் தீா்வாயத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 187 மனுக்களை அளித்தனா்.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க