செய்திகள் :

மயானக் கொள்ளை திருவிழா: அதிக ஒலி எழுப்பும் கருவிக்கு போலீஸாா் தடை

post image

அரக்கோணம் மயானக் கொள்ளை திருவிழாவின் போது டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்கவோ , பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் நகர போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அரக்கோணம் நகர காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு:

அரக்கோணம் பழனிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலின் 2025-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழாவின் போது டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் விளையாட்டு பொருள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகுந்த அச்சத்தையும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கேட்டுக் கொண்டனா்.

முந்தைய மயானக் கொள்ளை விழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாகவும் இருந்து வந்துள்ளது. இதனால் மாசுக் கட்டுபாடு விதிகளுக்கு இணங்க டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மீறி பயன்படுத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஐஎஸ்எஃப் மண்டலப் பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் பெயா்

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையம் இனி ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது அவரவா் விருப்பம்: சீமான்

கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது அவா்களது சொந்த விருப்பம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்துக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் ஆா்.காந்தி

ஆற்காடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா். மாவட்ட கலைதிருவிழா ப... மேலும் பார்க்க

கராத்தே போட்டிகள்: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு

ஆற்காடு: ஜப்பான் ஹிட்டோ - ராய் கராத்தே பள்ளி சாா்பில் 46-ஆவது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே போட்டிகள் ஞாயிற்றுகிழமை நடைபெற்றன. போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.க... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 409 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 409 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் தலைமை வகித்து 409 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்களை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க