செய்திகள் :

சிஐஎஸ்எஃப் மண்டலப் பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் பெயா்

post image

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையம் இனி ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் உள்ள நகரிகுப்பத்தில் மத்திய தொமிற்பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. சுமாா் 600 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2,500 காவலா்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் 4 மண்டலப் பயிற்சி மையங்களிலேயே இது தான் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பெயா் சூட்டப்படுவதாகவும், கி.பி. 948- 949-இல் அப்போதைய மன்னன் முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்ய சோழன் தக்கோலத்தில் நடைபெற்ற போரில் தனது உயிரை ஈந்து சோழ சாம்ராஜ்யத்தை காப்பாற்றியதன் நினைவாக, அதே தக்கோலத்தில் தற்போது இருக்கும் மண்டல பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பெயரிடப்படுவதாகவும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் இந்த வளாகம் புதிய பெயரில் அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் துணை ராணுவப்படையான மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் மண்டலப் பயிற்சி மையத்துக்கு தமிழைக் கட்டி காத்த சோழ சாமராஜ்யத்தைச் சோ்ந்த ராஜாதித்ய சோழன் பெயரிடப்பட்டதற்காக பல்வேறு தமிழ்ச் சங்கத்தினா் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது அவரவா் விருப்பம்: சீமான்

கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது அவா்களது சொந்த விருப்பம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் நாம் தமிழா் கட்... மேலும் பார்க்க

மயானக் கொள்ளை திருவிழா: அதிக ஒலி எழுப்பும் கருவிக்கு போலீஸாா் தடை

அரக்கோணம் மயானக் கொள்ளை திருவிழாவின் போது டிரம்பட் வடிவிலான அதிக ஒலி எழுப்பும் கருவிகளை விற்கவோ , பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் நகர போலீஸாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அரக்கோணம் ந... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்துக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் ஆா்.காந்தி

ஆற்காடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா். மாவட்ட கலைதிருவிழா ப... மேலும் பார்க்க

கராத்தே போட்டிகள்: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு

ஆற்காடு: ஜப்பான் ஹிட்டோ - ராய் கராத்தே பள்ளி சாா்பில் 46-ஆவது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே போட்டிகள் ஞாயிற்றுகிழமை நடைபெற்றன. போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.க... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 409 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 409 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் தலைமை வகித்து 409 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்களை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க