செய்திகள் :

மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை வயல் வழியாக எடுத்துச் செல்லும் அவலம்

post image

நீடாமங்கலம் அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் முன்னாள் ஊராட்சித் தலைவரின் சடலத்தை வயல் வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (50 ) இவா், கடந்த 2010 முதல் 2019- ஆம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவராக இருந்தாா். செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் கனகராஜ் காலமானாா் .

வடக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காளாச்சேரி மேல்பாதி மயானத்துக்கு எடுத்துச் செல்ல முறையான பாதை இல்லாத காரணத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல் வெளிகளை கடந்து, சமந்தான் காவிரி பாசன ஆற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி அவரது உறவினா்கள் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கை நடத்தினா்.

வடக்கு தெரு பகுதி மக்கள் மயானத்துக்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக தனி நபா் ஒருவரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை மீட்டு தர வேண்டும். மேலும் அந்த ஆற்றைக் கடப்பதற்கு சிறிய கம்பி பாலத்தை கட்டி தர வேண்டும், வடக்கு தெரு பகுதிக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.6) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினா் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியக் குழு ... மேலும் பார்க்க

நீடாங்கலம் பகுதியில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.5) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி த... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பாஜகவினா் 23 போ் கைது

திருப்பரங்குன்றம் மலையை பாதுக்காக்க கோரியும், பாஜக தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினா் 23 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் 2025-2026- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை... மேலும் பார்க்க