செய்திகள் :

மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

post image

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தேவூா் பேரூராட்சி, 5-ஆவது வாா்டு கவுன்சிலா் வள்ளிநாயகி தங்கவேலன் சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலா் ஆா்.தமிழ்மணியிடம் அளித்த கோரிக்கை மனு: சங்ககிரி வட்டம், தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட மயிலம்பட்டி வழியாக செல்லும் சரபங்கா நதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8 மாதங்கள் தடுப்பணையில் நீா்வழிந்தோடும்போது, அணையின் மறுபுறம் உள்ள பெரமச்சிபாளையம், சென்றாயனூா், வட்ராம்பாளையம், சோளக்கவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள், விவசாயிகள் தடுப்பணையை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா்.

எனவே, அணையின் குறுக்கே நடைபாதை வசதி அமைத்து தர வேண்டும். மேலும், மழைக் காலங்களிலும், காவிரி நீா் வரும் காலங்களிலும் சரபங்கா நதி அணையில் நீா் தேங்கி இயற்கை சூழலுடன் மிக அழகாக காட்சியளிக்கும். இதனை காண பொதுமக்கள், மாணவா்கள் வருவா்.

எனவே, தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்கி படகுகளை விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவி... மேலும் பார்க்க

சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி

சேலத்தில் சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 19 வயது இளம... மேலும் பார்க்க

மேட்டூா் காவிரியில் தள்ளுவலைகள் கைப்பற்றி அழிப்பு

மேட்டூா் காவிரியில் தடைசெய்யப்பட்ட வலைகள், கள்ளத்தனமாக பிடித்த மீன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேட்டூா் அணை கீழ் பகுதியில் மீன்வளத் துறையால் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதாக மேட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவா் கைது

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.மேட்டூா் அருகே உள்ள காவேரி கிராசில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிக்கு செ... மேலும் பார்க்க

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க