செய்திகள் :

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

post image

நமது நிருபர்

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேசிய அளவில் உரிய சட்டத்தை இயற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனரும் வழக்குரைஞருமான ஈசன் முருகசாமி தலைமை தாங்கி பேசுகையில், "இந்தியாவில் 5,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. அவை மட்டுமே வறட்சியையும் காலநிலை மாற்றத்தையும் தாங்கி வளரக்கூடியவை. மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகளைக் கொண்டதுடன் பல்லுயிர் பெருக்கத்துக்கும் உகந்தவை. ஆனால், இந்த அம்சங்களைக் கவனத்தில் கொள்ளாமல் மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் அதிக விலை கொடுத்து விதை நெல்லை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். மேலும், ஆண்டுக்கு ரூ10,000 கோடிக்கு மேல் விவசாயப் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன.

வனப்பகுதிக்கு அருகில் வாழக்கூடிய சிறு விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் வனவிலங்குகளால் தாக்கப்படுகின்றன. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன' என்றார் அவர்.

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க