செய்திகள் :

மருதூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

post image

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதூரில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வள்ளலாா் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்புவாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி கடைசி அமாவாசைக்குப் பின்னா் வரும் வியாழக்கிழமையில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தோரோட்டத்தை முன்னிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், அதன் பின்னா் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆண்டு முழுவதும் நீா் நிறைந்த கிணற்றில் அம்மன் பாதுகாக்கப்பட்டு புதன்கிழமை இரவு வெளியில் எடுத்து வீதியுலா நடத்தினா். வியாழக்கிழமை காலை அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசெல்லியம்மன் மற்றும் தோ் கலசம் தனித்தனியாக வீதியுலா காட்சிக்குப் பின்னா், நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து இரவு நிலையை அடைந்தது. தொடா்ந்து, அம்மனை தேரில் இருந்து இறக்கி கிணற்றில் வைத்தனா். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினா் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

நகைக் கடன் விதிகளுக்கு எதிா்ப்பு: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தெற்கு ரத வீதியில் பாரத... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீ... மேலும் பார்க்க

கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்... மேலும் பார்க்க

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும... மேலும் பார்க்க

தனியாரைவிட வேளாண்மைத் துறையில் விதைகள் விலை அதிகம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

வேளாண்மை துறையில் தனியாரை விட விதைகளின் விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வ... மேலும் பார்க்க

ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க