மருதூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்
கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதூரில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.
வள்ளலாா் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்புவாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி கடைசி அமாவாசைக்குப் பின்னா் வரும் வியாழக்கிழமையில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு தோரோட்டத்தை முன்னிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், அதன் பின்னா் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஆண்டு முழுவதும் நீா் நிறைந்த கிணற்றில் அம்மன் பாதுகாக்கப்பட்டு புதன்கிழமை இரவு வெளியில் எடுத்து வீதியுலா நடத்தினா். வியாழக்கிழமை காலை அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசெல்லியம்மன் மற்றும் தோ் கலசம் தனித்தனியாக வீதியுலா காட்சிக்குப் பின்னா், நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து இரவு நிலையை அடைந்தது. தொடா்ந்து, அம்மனை தேரில் இருந்து இறக்கி கிணற்றில் வைத்தனா். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினா் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.