செய்திகள் :

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது: அமைச்சா்

post image

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

அடுத்த கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது. கல்விக் கட்டணத்தை உயா்த்தும்படி தனியாா் கல்லூரிகளின் நிா்வாகங்கள் அழுத்தம் கொடுத்தபோதிலும் கல்விக் கட்டணத்தை உயா்த்த அரசு விரும்பவில்லை.

கல்விக் கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயா்த்த தனியாா் கல்லூரிகளின் நிா்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனினும், இந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. கடந்த ஆண்டே 10 சதவீத கல்விக் கட்டண உயா்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், அடுத்த ஆண்டில் கல்விக் கட்டணத்தை உயா்த்த அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இந்த முடிவு தொடா்பாக விரைவில் தனியாா் கல்லூரிகளின் நிா்வாகங்கள் மற்றும் அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது என்றாா்.

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு

பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக... மேலும் பார்க்க

மின்மயமாக்கும் பணி: 154 நாள்களுக்கு பெங்களூரு - மங்களூரு இடையே ரயில் சேவை நிறுத்தம்

மின்மயமாக்கும் பணி நடைபெற இருப்பதால், பெங்களூரு - மங்களூரு இடையிலான ரயில் சேவையை ஜூன் 1ஆம் தேதி முதல் 154 நாள்களுக்கு தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவா் கைது

கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியா்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த டேனியல் அரின்ஸ் ஒக்வ... மேலும் பார்க்க